வணக்கம் நண்பர்களே ,
நாம் இவ்வளவு நாட்களாக திறமையான கேப்டன் என்று நினைத்திருந்த டோனி தான் திறமை அற்றவர், வெறும் அதிர்ஷ்டசாலி மட்டும் தான் என்ற உண்மையை இப்பொழுது உணர்த்தியிருக்கிறார் . கேப்டன் என்றால் திட்டமிட்டு அணியை வழி நடத்துபவர் என்று பொருள் ஆனால் எந்த ஒரு திட்டமிடுதலும் இன்றி தன் போக்கிற்கு செயல் படுகிறார் . "காட்டான்" யூசுப் பதானை அணியில் சேர்த்த பொழுதே நம்பிக்கையை இழந்து விட்டார் டோனி , யூசுப் பதானை சேர்ப்பதற்காக அணியில் இருந்து நீக்கப்பட்டவர் சுரேஷ் ரெய்னா , யூசுப் பதான் சுரேஷ் ரெய்னா விற்கு சமமானவரா?. எப்பொழுதாவது காட்டுத்தனமாக விளையாடும் யூசுப் பதானை வைத்துக்கொண்டு சிறப்பாக விளையாடகூடிய ரெய்னாவை சேர்க்காதது ஆச்சர்யம் , ரெய்னா ஒரு சிறந்த பீல்டர் , துடிப்பானவர் ஆனால் பதானோ களிமண் , சொங்கி , காட்டான்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் திறமையானவர்களுக்கு கிடைப்பதில்லை . இது ஒருபுறம் இருக்கட்டும் திறமையாக , மிகவும் சிறப்பாக, ஒவ்வொரு போட்டியிலும் ஆடிகொண்டிருந்த விராத் ஹோலி யை காலி செய்து விட்டார் டோனி , தேவை இல்லாமல் பதானை முன் வரிசையில் இறக்கி கோலி யை காலி செய்து விட்டார் , இனிமேல் கோலி முன்போல் விளையாடுவாரா என்பது சந்தேகமே ? ஒருவேளை அவர் தன்னம்பிக்கையை இழந்திருந்தால் என்ன செய்வது ?. பந்து வீச்சாளர்களை சுதந்திரமாக செயல்படவிடுவது நல்லது தான் அதற்காக எந்த ஒரு அறிவுரையும் வழங்காமல் சுதந்திரம் கொடுபதற்க்கு கேப்டன் என்ற பொறுப்பு எதற்கு ?. எப்படி பட்ட பந்துகளை எதிர்கொள்வதற்கு கஷ்டமாக இருக்கும் என்று batsman களுக்கு நன்றாக தெரியும் , அப்படி பட்ட பந்துகளை வீசும்படி அறிவுறுத்த வேண்டும் அதை விட்டுவிட்டு நன்றாக அடிப்பதற்கு ஏற்ற வகையில் o.p பந்துகளாக வீசுகிறார்கள் முனாப் படேல் மற்றும் ஆஷிஸ் நேரா. இவர்கள் யாருக்கு நன்றாக பந்த் வீசுவார்கள் என்றே தெரியவில்லை batsman களுக்கும் சரியாக பந்து வீசுவதில்லை , bowler களுக்கும் சரியாக பந்து வீச தெரியவில்லை பின் எதற்காக இவர்கள் ? எருமை சாணியை முகத்தில் அப்பியது போன்றதொரு reaction இவர்களிடத்தில் . கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் டோனி உண்மையில் அவர் கூலாக இருப்பதில்லை , அவர் "களிமண்ணாக" இருப்பது நமக்கு பார்ப்பதற்கு கூல் போன்று தெரிகிறது என்பது தான் நிஜம் . இதுவரை இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைத்திருந்த நாம் இனி திறமையாய் விளையாடும் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நிலை உருவாகி இருக்கிறது , அந்த திறமைக்குள் இந்தியா வருமா என்பது இப்பொழுது பெரும் சந்தேகமே ?
டோனி மீது கோபத்துடன் உங்கள் நண்பன் பாரதி. . . . . . .